2026 தேர்தலை நோக்கி புதிய எழுச்சி!புலியின் பாய்ச்சல் ஆரம்பமாகிறது.தமிழர் அடையாளம், உரிமை, எதிர்காலம்—இவை அனைத்திற்காக ஒரு புதிய பாதை.நாம் தமிழர் கட்சிஆதரவாளர்களின் உற்சாகம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.இந்த முறை மாற்றம் உறுதி!
முருகன் என்பது பேய் வழிபாடா? சங்க இலக்கியம் சொல்வது என்ன?
TS Krishnavel claims to be a historical researcher. He spoke without even understanding what Sangam literature is. He is saying that the name Murugan doesn’t exist in Sangam literature. We already released two videos in response to him. TS Krishnavel has also said that Murugan worship is merely a ritual of exorcising spirits. Generally, Aryans…
T.S Krishnavel எனும் தற்குறி!
Generally, those who speak about Dravidian ideology tend to write fictional narratives in the name of history. Later, they themselves speak about those books as if they are historical evidence. One such person who speaks without any historical evidence is T. S. Krishnavel. In one of his videos, the so-called Dravidian model historian T. S….
வரலாறே தெரியாத ஆய்வாளர் T.S கிருஷ்ணவேல்
TS Krishnavel is introduced as a historian. When asked if he is talking about history, TS Krishnavel tells a lie without hesitation, saying that the name Murugan does not appear in Sangam literature. The name Murugan appears in the very first song of Akanaanooru in Sangam literature. They must have known that the name Murugan…
உப்பளங்களை அழித்து கப்பல் கட்டும் தளமா?
Both the Central Government and the State Government have taken steps to establish a shipbuilding yard in Thoothukudi (Tuticorin). There is no objection to the establishment of a shipbuilding facility. The Government of Tamil Nadu (Government of Tamil Nadu) plans to acquire certain lands for setting up the shipbuilding yard. The government intends to acquire…
தமிழன் ஏன் அடிமையானான்?
There is something even more disgraceful than being enslaved — not realizing that we are living in slavery. Sadly, this statement applies very precisely to a large section of Tamils. Many people do not seem to care who rules our state. But when it comes to power, there is a strange mindset that native Tamils…
சல்லியர்கள் – எதிரிகளால் கூட குறைசொல்ல முடியாத படம்
மேதகு படத்தைப்போல இன்னொரு வரலாற்று சிறப்புமிக்க திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் கிட்டு. சல்லியர்கள், ஈழத்தமிழர் வரலாற்றின் ஒரு மைல் கல். தமிழர் வரலாற்றைச் சொல்லும் படத்தைத் தமிழ்நாட்டில் வெளியிட முடியவில்லை என்பது தமிழர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டிய செய்தி. இத்தனை இன்னல்களுக்கு நடுவிலும் இந்தப் படத்தைத் தமிழர்களிடம் கொண்டுபோய் சேர்த்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்களுக்கும் இயக்குனர் கிட்டு அவர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள். சல்லியர்கள் திரைப்படத்தைத் திரையிட மறுத்த PVR திரையரங்குகளைத் தமிழர்கள் புறக்கணிப்போம். சல்லியர்கள் திரைப்படத்தை…
கழுகுமலை வெட்டுவான் கோவிலும்! ஓர் அதிசயப் பறவையும்!
குடைவரைக்கோவில் என்பது தமிழர்களின் கலை. முதலில் குடைவரைக்கோவில்கள் உருவாக்கப்பட்டது தமிழ்நாட்டில்தான். மாமல்லபுரத்தில் இருக்கும் குடைவரைக்கோவில்களே இதற்கு சான்று. மாமல்லபுரத்து குடைவரைக்கோவில்களை முன்மாதிரியாகக் கொண்டுதான் எல்லோரா குடைவரைக்கோவில்கள் கட்டப்பட்டது. ஆனால் எல்லோரா குடைவரைக்கோவில்கள் மலையை மேலிருந்தே குடைந்து கட்டப்பட்டது. எல்லோரா குடைவரைக்கோவில்கள் பிரம்மாண்டத்தின் உச்சமென்று சொல்லலாம். தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் இருக்கும் வெட்டுவான் கோவிலும் எல்லோரா குடைவரைக்கோவில் போலவே மேலிருந்து மலையைக் குடைந்து கட்டப்பட்ட கோவில். தமிழ்நாட்டில் இப்படிக் கட்டப்பட்ட ஒரே கோவில் கழுகுமலை வெட்டுவான் கோவில்தான். இது…
தமிழ்க்கடவுள் முருகன் பற்றி திடுக்கிடும் தகவல்கள்!
தமிழ்க்கடவுள் முருகன் மீது நடந்த பண்பாட்டுத் திணிப்புகள் எண்ணிலடங்காதவை. முருகனின் பெயர், வாகனம், தாய் தந்தை, மனைவி உள்ளிட்ட அனைத்துத் தரவுகளிலும் ஆரியக் கதைகள் முருகனது வரலாற்றையே மாற்றியிருக்கிறது என்பதே உண்மை. முருகன் பற்றிய சான்றுகளை சங்க இலக்கியங்கள் மூலமாகக் கொடுத்திருக்கிறேன். காணொளியைப் பார்த்துத் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்.
பழமொழிகளில் புதைந்த தமிழ் வரலாறு! | Tamil Proverbs with the history of Tamilnadu!
பழமொழிகள் ஒன்றிரண்டு வரிகள்தான் என்றாலும், அது தாங்கி நிற்கும் வரலாற்றின் ஆழம் அதிகம். ‘கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே’ என்ற ஒற்றை வரியின் மூலம் குறிஞ்சி நிலத்தின் நாகரிகம் வரைக்கும் நம்மால் பயணப்பட முடிகிறது. தமிழர்களின் பண்பாட்டையும், கலாச்சாரக் கூறுகளையும் உள்ளடக்கிய சில பழமொழிகளைக் காணலாம். காணொளியைப் பார்த்துத் தங்களின் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
தாய்லாந்தில் நீங்கள் செய்ய வேண்டிய முதல் வேலை!
தமிழ்நாட்டில் நடந்த பிரிட்டிஷ் ஆட்சி பிடிக்காமல், தாய்லாந்து நாட்டுக்குச் சென்ற ஒரு குழுவினரை வைத்திப் படையாட்சி என்ற தமிழர் வழிநடத்திச் சென்றிருந்தார். வழிநடத்திச் சென்றதோடு மட்டுமல்ல, தாய்லாந்து நாட்டில் மாரியம்மனுக்கு ஒரு கோவிலும் கட்டியிருக்கிறார். தாய்லாந்து அரசாங்கமே வைதிப்படையாட்சி அவர்களுடையப் பெயரை கோவிலுக்கு அருகிலிருக்கும் தெருவுக்கு வைத்துப் பெருமைப் படுத்தியிருக்கிறது. வைத்திப் படையாச்சியின் வாழ்க்கை வரலாறு ஆராய்ந்து தமிழ் மக்களிடையே கொண்டு வரப்பட வேண்டும் என்பது இந்தக் காணொளியின் முதன்மையான நோக்கம். தாய்லாந்து நாட்டுக்கு செல்லும் தமிழர்கள்…
அர்த்தநாரீஸ்வரர்: கடவுளா? கண்ணகியா? | Ardhanarishvara: God or Kannagi?
கண்ணகி வழிபாடு தமிழ்நாட்டில் பல வடிவங்களில் இருக்கிறது. கண்ணகியின் சாபத்திற்குப் பின் தமிழ்நாட்டில் பஞ்சம் நிலவியதால், மழைக்காக கண்ணகியிடம் வேண்டினார்கள். அதுதான் மாரியம்மன் வழிபாடு. செல்லத்தம்மன், பகவதியம்மன் என்ற பெயர்களில் கண்ணகி வழிபாடு உண்டு. ஆனால் அர்த்தநாரீஸ்வரர் என்பது கண்ணகியின் வழிபாடாக இருக்கலாம் என்ற யூகங்கள் நிலவுகிறது. அது தொடர்பான ஆய்வுகள் நடக்கின்றன. சேரன் செங்குட்டுவன் இமயமலையிலிருந்து கல்லெடுத்து வந்து கண்ணகிக்கு சிலை எடுத்தது தெரியும். கண்ணகி ஒரு மார்பை இழந்தவர் என்பதால் சிலை செய்யும்போது மார்பு…
திராவிடம் – நறுக்குவோம் பகையின் வேர்
திராவிடம் என்பது தமிழ்நாட்டைத் தமிழரல்லாதவர்கள் ஆளவும் கொள்ளையடிக்கவும் உருவாக்கப்பட்ட ஒரு சதிகாரக் கூட்டமைப்பு. பல தமிழ்த்தேசிய சிந்தனை கொண்ட தலைவர்களும் திராவிடத்தோடு உறவாடியிருக்கிறார்கள். ஆனால், கடைசியில் தமிழ்த்தேசியத்தை அழிக்கும் கருவி என்பதை உணர்ந்து கொண்டனர். திராவிடம் பற்றி சில தலைவர்கள் சொன்ன கருத்துக்களைக் காண்போம். அயோத்திதாசப் பண்டிதர், மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர், முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விஸ்வநாதம், பாவலரேறு பெருஞ்சித்திரனார், தந்தை சி.பா. ஆதித்தனார், ஒரிசா பாலசுப்ரமணியம், அண்ணல் அம்பேத்கர் ஆகியோர் திராவிடம் பற்றி சொன்ன கருத்துக்கள் சுருக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளன….
இந்தியாவை ஆட்சிசெய்த கற்பனை கதாநாயகன்! | The fictional hero who ruled India!
அறிவில் சிறந்தவர்கள் என்றும் ஆளுமைத்திறனுடன் இருப்பார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால், வெறும் புராணக்கதைகள் மூலமாகவும், பொய்யான வரலாற்றுக் கதாபாத்திரங்கள் மூலமாகவும் நாங்கள் அறிவாளிகள் என்று சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால், ஒட்டுமொத்த இந்தியாவே அப்படிப்பட்ட கற்பனைக் கதாபாத்திரங்கள் மூலமாகவும், புராணக்கதைகள் மூலமாகவும் அடிமையாக்கப்பட்டது என்று சொன்னால் உங்களுக்கு வியப்பாக இருக்கும். அப்படி உருவாக்கப்பட்ட ஒரு கற்பனை கதாபாத்திரம்தான் சாணக்கியன். சாணக்கியன்தான் சந்திரகுப்த மௌரியரை ஆளாக்கி மௌரிய அரசை உருவாக்கினான் என்று சொல்கிறார்கள். இந்தியாவிலே…
இந்த வரலாறு தெரியாமல் ‘தமிழ்நாடு’ என்று சொல்லாதீர்கள்!
தமிழர்கள் சேர நாடு, சோழநாடு, பாண்டியநாடு, ஈழ நாடு என்று பல நாடுகளாகப் பிரிந்து வாழ்ந்தாலும், ஒட்டுமொத்தமாகத் தமிழர்கள் வாழும் பகுதி தமிழ்நாடு என்னும் புரிதல் தமிழர்களிடையே பல்லாயிரம் ஆண்டுகளாகவே இருந்திருக்கிறது. பெருந்தலைவர் காமராஜர் ஆட்சி காலத்திலேயே மெட்ராஸ் மாகாணம் என்ற பெயர் தமிழ்நாடு என்று பெயர் மாற்றப்பட்டது என்பதுதான் வரலாறு நமக்கு சொல்லும் செய்தி. பெருந்தலைவர் ஆட்சிகாலத்துக்கு முன்பே, பாரதியாரும் பாவேந்தர் பாரதிதாசனும் தமிழ்நாடு என்று பாடி விட்டார்கள். அவர்கள் இருவருக்கும் முன்பு, பெரியபுராணம், கம்பராமாயணம்,…
திராவிடம் – ஆரிய மடத்தின் A Team | Dravidam – A Team of Ariyan
திராவிடம் என்னும் சங்கேதச்சொல் அழித்துவிட்டுச் சென்ற தமிழின் வரலாற்றுத் தடயங்கள் பல்லாயிரம். திராவிடம், தமிழ் என்ற முகமூடியை அணிந்துகொண்டு ஆரியத்துடன் கள்ளக்கூட்டணியில் ஈடுபடுவது என்றும் புதிதல்ல. ஆரியத்தை எதிர்க்கிறோம் என்ற பொய் பிம்பத்தை நம்பி ஏமாந்து போகும் தமிழர்கள் இன்றும் இருக்கிறார்கள் என்பதுதான் தமிழுக்கு வந்த சோதனை. நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்டிருப்பது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்தும் திராவிடம் முன் வைக்கும் சான்றுகளின் உண்மைத்தன்மையை அலசுகிறது இந்தக் காணொளி. காணொளியைப் பார்த்துவிட்டுத் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்யுமாறு…
நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டிருக்கும் பழமொழிகள் | Wrongly understood Tamil Proverbs
பல்லாயிரம் காலத்து அனுபவங்களின் தொகுப்புதான் பழமொழிகள் என்று சொன்னால் மிகையாகாது. தமிழில் காலங்காலமாக வழக்கில் இருக்கும் சில பழமொழிகளைக் காண்போம். சில பழமொழிகளுக்கு பல அர்த்தங்கள் உண்டு. மேலும் சில பழமொழிகளை நாம் தவறாகப் புரிந்து வைத்திருக்கிறோம். அவற்றின் சரியான பொருள் என்ன என்பதையும் காண்போம்.
18 கோடிக்கு சரஸ்வதி மஹால் நூலகத்தில் திருடப்பட்ட பைபிள் | Ancient Bible Stolen for 18 Crores
தமிழ் மொழியின் அளப்பரிய பெருமைகளில் ஒன்று, ஆசியாவில் அச்சிடப்பட்ட முதல் பைபிள். அச்சிடப்பட்ட 3 பைபிளில் இரண்டை ஏற்கனவே டென்மார்க்கும் இங்கிலாந்தும் எடுத்துக்கொண்டது. மூன்றாவது பைபிள் 2005ம் ஆண்டு வரை சரஸ்வதி மஹால் நூலகத்தில் பாதுகாப்பாகத்தான் இருந்தது. ஆனால் அதனையும் 18 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்து இரண்டு ஜெர்மானியர்கள் திருடிக்கொண்டு போய்விட்டனர். தமிழ்நாடு அரசாங்கம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழ்நாட்டின் பெருமைமிகு ஆவணங்களின் மீது தமிழ்நாட்டு அரசாங்கத்தின் அக்கறை அவ்வளவுதான். அந்த பைபிள் மட்டுமல்ல,…
ஈழம் – தண்ணீருக்கு நடுவில் ஒரு கண்ணீர்த்துளி | Eelam – A teardrop in the middle of ocean
21ம் நூற்றாண்டில் நமது கண்முன்னே நம் உறவுகள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள். உலகத்தில் 10 கோடி தமிழர்கள் இருக்கிறோமென்று மார்தட்டிக் கொண்டாலும், நமது தொப்புள்கொடி உறவுகள் சிதைக்கப்பட்டபோது நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இதற்கு முதன்மையான காரணம், தமிழர்களுக்கு ஈழத்தின் பூர்வகுடிகள் யார் என்ற புரிதல் இல்லை என்பதுதான். ஈழத்தின் பூர்வகுடிகள் யார் என்பதை விளக்குகிறது இந்தக் காணொளி. காணொளியைப் பார்த்து, தங்கள் கருத்துக்களைப் பதிவிடுங்கள். In the 21st century, our Tamil peoples were massacred…
தமிழர்கள் இந்தியாவை இழந்த கதை! | How Tamil People Lost India!
தமிழ்நாட்டைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும், பிற மாநிலத்தவர் அந்த மண்ணை ஆட்சிசெய்ய முடியாது. ஆனால் தமிழ்நாட்டில், தமிழர்கள் ஆட்சி செய்வது மிக மிக அரிது. இந்த நிலை மாறினால்தான் தமிழர் வாழ்வில் முன்னேற்றம் வரும். இனி வரும் காலங்களில் தமிழரல்லாத ஒருவர் தமிழ்நாட்டை ஆள முடியாது என்ற நிலை வரும். அதற்கான முதல் படிதான் இந்தக் காணொளி. அனைவரும் காணொளியைப் பார்த்துத் தங்களின் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.
ராமருக்கு All The Best சொன்ன ஆதாம்! | आदम ने कहा भगवान राम को शुभकामनाएँ !
தமிழ்நாட்டுக்கும் ஈழத்துக்கும் இடையிலான பாலம் போன்ற நிலப்பரப்புக்குப் பின்னால் நாடளாவிய அரசியலும் உண்டு உலகளாவிய மதச்சாயமும் உண்டு. தமிழ்நாட்டுக்கும் ஈழத்துக்கு இடையே இருப்பது மண்ணாலான இணைப்பு என்கிறது அறிவியல். நாசாவே சொல்லிவிட்டது அது ராமர் கட்டிய பாலம் என்கிறது இந்து மதம். இல்லை அது ஆதாம் பாலம் என்கிறது கிறிஸ்தவ மதம். இல்லை இல்லை அது சேதுபதி மன்னர்கள் ஆண்டதால் அதனை சேதுப்பாலம் என்கிறார்கள் ஒரு சாரார். அந்த நிலப்பரப்புக்குப் பின்னால் இருக்கும் வரலாற்று உண்மை என்ன?…
நீங்களும் எழுத்தாளர் ஆகலாம் | How to become a writer
எழுதுவது ஒரு கலை. ஒரு கதை எழுத வேண்டும், வரலாறு தொடர்பான புதினம் (நாவல்) எழுத வேண்டுமென்று பலருக்கும் ஆசை இருக்கும். ஆனால், எல்லோராலும் எழுத்தாளர் ஆகிவிட முடியாது என்ற எண்ணம் பலரிடம் இருக்கிறது. அது உண்மையல்ல. திட்டமிட்டு எழுதினால் அனைவராலும் எழுத முடியும். எழுதுவதை எவ்வாறு திட்டமிட வேண்டுமென்பதை விளக்குகிறது இந்தக் காணொளி. காணொளியைப் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களைப் பதிவிடுங்கள். Writing is an art. Many people have a desire to write…
தேசம் தேசியம் தமிழ்ச்சொல்தானா |Is Desam a Hindi word
தேசம், தேசியம் என்ற இரண்டு சொற்களை சுற்றித்தான் தமிழக அரசியல் நகர்கிறது. இவை தமிழ்ச்சொற்களா அல்லது வடமொழியிலிருந்து கடன் வாங்கப்பட்ட சொற்களா? அலசுகிறது இந்தக் காணொளி. Tamil Nadu politics revolves around two words: nation and nationality. Are these Tamil words or words borrowed from the vernacular? This video analyzes.
காமராஜர் AC இல்லாமல் தூங்க மாட்டாரா? | Trichy Siva controversial speech about Kamarajar
எளிமையின் அடையாளம் காமராஜர். ஒரு அரசியல்வாதி இப்படித்தான் இருக்க வேண்டுமென்று வாழ்ந்து காட்டியவர் பெருந்தலைவர் காமராஜர். வாழ்நாள் முழுவதும் ஒரு வாடகை வீட்டில்தான் வாழ்ந்தார். திருச்சி சிவா என்னும் வரலாற்றைப் படிக்காத ஒருவர், காமராஜர் AC இல்லாமல் தூங்க மாட்டார். காமராஜர் சென்ற இடமெல்லாம் கருணாநிதி AC வைத்துக் கொடுத்தார் என்றெல்லாம் பச்சைப்பொய்களை சொல்கிறார். இந்த மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் வாழ்ந்து மறைந்த பெருந்தலைவர் மீது சொன்ன அவதூறுகளுக்கான பதிலடிதான் இந்தக் காணொளி. Kamarajar is the epitome…
எனக்கு மட்டும் ஏன்?
எனக்கு மட்டும் ஏன் இந்த நிலைமை என்று நீ எண்ணிக் குமுறும் வலிகள் அனைத்தும், நீ எண்ணுவதை விட பலமடங்காக பல கோடிபேருக்கு நிகழ்ந்து கொண்டிருக்கிறது இந்த பூமியில். எப்போதும் சிரித்த முகமாகத் தென்படும் உனது நண்பர்கள் ஒவ்வொருவருக்குள்ளும் அழுவதற்கு ஆயிரம் காரணங்கள் புதைந்து கிடக்கத்தான் செய்கிறது. இதுவல்லவோ வாழ்க்கை என்று நீ வியந்து பார்க்கும் எல்லோருக்குமே, நாம் ஏன் வாழ்கிறோம் என்ற விரக்தி அவ்வப்போது எட்டிப் பார்க்காமல் இருந்ததில்லை. இனி வாழவேண்டாமென்ற முடிவுக்கு உன்னைத் தள்ளிய…
மேதகு – ஒரு கண்ணோட்டம்
வழக்கமாக, திரைப்படத்தில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் கற்பனை, எனக்கும் இந்த படத்துக்கும் தொடர்பே இல்லை என்பது போன்ற பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் வார்த்தைகளை, ஒவ்வொரு திரைப்படங்களிலும் பார்த்திருப்போம். அதற்கு மாறாக “இப்படத்தில் வரும் கதாபாத்திரங்கள், கதைக்களம், சம்பவங்கள் அனைத்துக்கும் படக்குழுவினரே பொறுப்பு” என்று முதல் திரையிலே நமது புருவங்களை உயரச்செய்த படக்குழுவினருக்கு பாராட்டுகள். தெருக்கூத்துக் கலைஞர்கள், தமிழினத்தலைவர் பிரபாகரனின் வரலாற்றைச் சொல்வதுபோல திரைப்படத்தை அமைத்திருப்பது மிகச்சிறப்பு. தெருக்கூத்து என்றாலே, ராமாயணம், மகாபாரதம் போன்ற வடக்கத்திய கதைகளை மட்டும் பெரும்பாலும்…
உன் வாக்கு ஒன்றே மாறுதல்
வந்தாரை வாழவைத்து நீமட்டும் வீழ்ந்தாய் – நம்தாய்மண்ணின் தமையர்தமை தரக்குறைவு செய்தாய் செய்ததெல்லாம் தவறென்று இன்றாவது உணர்வாய் – வீண்சாதிமத பேதம் விட்டு ஓரினமாய் இணைவாய் இணைந்த பின்பு இத்தரணியில் எதிரியேது உனக்கு – இனிபணிந்து நிற்கும் ஏழுலகும் தமிழர்தம் வாளுக்கு வாளெடுத்து வீழ்ந்ததில்லை என்றும் நம்மினமே – பெரும்தோளெடுத்து பொங்கியெழு பகைவர் அஞ்சிடவே அஞ்சுவதால் நாமடைந்த நன்மையேதும் இலையே – கண்துஞ்ச மறு தாய்நிலத்தின் விடுதலையைப் பெறவே பெற்ற மண்ணைப் பறிக்க வந்த பகைவரைக் கருவறுப்போம்…
நான்
நான் என்பது தனிமனிதனல்ல, சமுதாயத்தின் ஓர் அங்கம். சமுதாயம் என்பது மக்கள்தொகையல்ல, அறவோர் வாழும் கூட்டமைப்பு. அறம் என்பது சட்டதிட்டமல்ல, மனதளவில் தூய்மையாய் வாழ்தல். மனம் என்பது மூளையின் பரிணாமமல்ல, ஐம்புலன்களின் கட்டுப்பாடு. ஐம்புலன்கள் என்பது சுகங்களை நுகர்வதற்கல்ல, இயற்கையின் இயல்பை உணர்ந்து போற்றுவதற்கு. இயற்கை என்பது நம் தலைமுறை மட்டும் வாழ்ந்து தீர்ப்பதற்கல்ல, வருங்காலத்தை வாழவைப்பது. வருங்காலம் என்பது கனவல்ல, நிகழ்காலத்தின் தொடர்ச்சி. நிகழ்காலம் என்பது நிகழ்வுகளின் தொகுப்பல்ல, சந்ததிகளின் தலையழுத்து. தலையெழுத்து என்பது விதிக்கப்பட்டதல்ல,…
மேதகு
அவர் காலடிகளில் காத்துக்கிடந்த பதவிகள் அத்தனை. நினைத்திருந்தால், உலகின் அனைத்துவித சுகங்களையும் ஒரே இடத்தில் கொண்டுவந்து குவித்துவிடும் அளவுக்கு செல்வச்செழிப்போடு வாழ்ந்திருக்க முடியும். பெற்ற பிள்ளைகளை உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் படிக்க வைத்திருக்க முடியும். மனைவியோடும், பிள்ளைகளோடும் மாடமாளிகையில் காலம் கழித்திருக்க முடியும். ஆனால், காடுதான் பெரும்பாலும் அவருக்கு வீடாக இருந்தது. பிறந்த நாட்டின் விடுதலை நெருப்பு ஒன்றே அவர் நெஞ்சில் பற்றி எரிந்தது. முதுகுக்குப் பின்னால் இந்தியா என்ற மாபெரும் துரோகத்தை சுமந்து கொண்டு, முகத்துக்கு…
தமிழை மறந்த தமிழர்களுக்கு ஒரு கடிதம்
தமிழை மறந்து போன தமிழர்களுக்கு, பச்சைத்தமிழனின் கடிதம். மடல் என்ற வார்த்தையைப் பயன்படுத்த சிறு தயக்கம். ஏனென்றால், சங்க காலத்தில் மடலேறுதல் என்பது காதலை ஏற்றுக்கொள்ளாத பெண்ணிடம் ஊரறிய பகிரங்கமாக தனது காதலை சொல்வதற்கு பயன்படுத்தும் ஒரு செயல். அது ஐந்திணை ஒழுக்கத்தில் வராது, அதனால் மடல் என்பதை விட கடிதம் என்ற வார்த்தையைக் குறிப்பிட விரும்புகிறேன். இது தாய்த்தமிழை நேசிப்பவர்களுக்கு எழுதப்பட்ட கடிதமல்ல என்பதையும் பதிவு செய்கிறேன். தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட நீங்கள் யாரும் தமிழன் கட்டிய கோயிலில்,…
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப – நான்கு
நான்கு நீங்கள் நாலும் தெரிந்தவரா? என்று ஒரு மனிதரின் அறிவுக்கு சவால் விடும் வேலையை நான்கு என்ற எண்தான் துவக்கி வைக்கிறது. கோடிக்கணக்கில் தெரிந்தவரா என்று கேட்டால் கூட, பல புத்தகங்களை கரைத்துக் குடித்து ஏப்பம் விட்டவர் போலிருக்கிறது என்று நினைத்து ஆச்சர்யப்படலாம். எவ்வளவோ எண்கள் இருந்தும், ஏன் நாலும் தெரிந்தவரா என்று கேட்கிறார்கள்? இந்த கேள்விக்கு, நான்கு தொடர்பான தகவல்களைத் திரட்டும்போது மனதில் தோன்றிய பதிலை சொல்கிறேன். அந்த பதில் சரிதானா என்ற முடிவை உங்களிடமே…
தமிழர்களின் அடிமை வாழ்வு – பாகம் 2
முதல் பாகத்தின் தொடர்ச்சி தமிழர்கள் எவ்வாறு அடிமை செய்யப்பட்டார்கள் என்ற ஆய்வின் இரண்டாவது கட்டுரை இது. சங்ககாலம் முதல் பல்லவர்கள் நுழைவு வரை முதல் பாகத்தில் ஆராயப்பட்டது. இரண்டாம் பாகத்தில் ஆறாம் நூற்றாண்டு முதல் 18ம் நூற்றாண்டு வரையிலான வரலாற்று நிகழ்வுகள் ஆராயப்பட இருக்கின்றன. கிட்டத்தட்ட 1200 ஆண்டு வரலாற்றை சில பக்கங்களுக்குள் அடக்கி விட முடியுமா என்ற வியப்பு பலர் கண்முன்னே விரிந்து நிற்குமென்று நம்புகிறேன். ஆனால் தமிழர்களின் வாழ்வை அடியோடு புரட்டிப்போட்ட சில நிகழ்வுகளை…
ஏன் கடவுள்?
ஈ.வே.ராமசாமியை விமர்சிப்போம் கடவுள் இல்லை இல்லை இல்லவே இல்லை! கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்! கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன்! கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி! என்று ஈ.வே.ராமசாமி சொன்னதை, பகுத்தறிவேயில்லாமல் ஏற்றுக்கொண்டு, ஈ.வே.ராமசாமியைக் கடவுள் போலவே சித்தரிக்க முற்படும் ஒரு கூட்டம் இன்றும் தமிழகத்தில் உண்டு. கூடியவிரைவில் அந்தக்கூட்டம், கடவுள் ஈரோட்டில் பிறந்தார் என்று சொன்னாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. எனக்கு ஈ.வே.ராமசாமி மீது மதிப்பும் உண்டு, நிறைய விமர்சனங்களும் உண்டு. திருவள்ளுவரையே விமர்சனத்தோடு அணுகலாம் என்ற பார்வை கொண்ட தமிழகத்தில், ஈ.வே.ராமசாமியை விமர்சனம் செய்தால் மட்டும் கொந்தளிக்கிற…
தமிழர்களின் அடிமை வரலாறு – பாகம் 1
வரலாறு தனது வரலாற்றை மறந்த இனம் வளமுடன் வாழாது. தாய்மொழியைத் துறந்த இனம் அடிமைப்பட்டுப் போகும். உலகில் அடிமைப்பட்டுக் கிடக்கும் எந்த ஒரு இனத்தின் பின்னனியை ஆராய்ந்து பார்த்தாலும், நமக்கு இரண்டு தகவல்கள் நிச்சயம் கிடைக்கும். ஒன்று, அந்த இனத்தின் தாய்மொழி அழிக்கப்பட்டிருக்கும், இன்னொன்று அவர்களின் வரலாறு மறைக்கப்பட்டிருக்கும். அதன்பின்னர் அந்த இனம் மெல்லமெல்ல அடிமைத்தளையில் சிக்குண்டு சீரழிந்து போகும். இதுபோன்ற சீரழிவுகளைச் சந்தித்துக் கொண்டிருக்கும் இனங்களில் ஒன்று தமிழினம். உலகின் பிற இனங்கள், விலங்குகளை வேட்டையாட கையில்…
வாக்குத் தவறானால்?
தனது வாழ்நாளில் அன்றுதான் கடைசிநாள் என்பதை உணராமல் அவர் நாட்டியத்தைக் கண்டுகளித்துக் கொண்டிருந்தார் . அவர் ரசிப்பது நாட்டியத்தையா அல்லது நடன மங்கைகளையா என்ற கோபம் அவர் மனைவிக்கு. தனிமையில் இருந்திருந்தால் தவறைச் சுட்டிக்காட்டி இடித்துரைக்கலாம். ஆனால் நாடாளும் அரசனை அவை முன்னிலையில் எவ்வாறு கடிந்துகொள்வது? தான் கோபத்திலிருக்கிறேன் என்றுணர்த்த விருட்டென்று எழுந்து சென்றாள் அவள். கோப்பெருந்தேவி கோபப்பெருந்தேவி ஆனாள். அவள் விருட்டென்று போனதும் சுருக்கென்று புத்தியில் உரைத்தது அவருக்கு. இல்லாளின் உள்ளம் குளிரச்செய்யும் வழியறியாது அரியணை…
உணர்வுகளின் நுண்ணறிவு (Emotional Intelligence)
மிருகம் பாதி மனிதன் பாதி அது அடர்ந்த காடு. புலிகளுக்கும், சிறுத்தைகளும் நடுவில் வாழ வேண்டிய கட்டாயம். பலம் மிக்க விலங்குகளுக்கிடையே, அந்த ஒரு விலங்குக்கூட்டம் மட்டும் பலவீனமாக சுற்றித் திரிந்தது. காட்டுக்குள் வேறெந்த விலங்குகளுக்கும் இல்லாத ஆபத்துகள் அனைத்தும் அந்த விலங்குக் கூட்டத்துக்குக் காத்திருந்தன. ஏன்? அந்த விலங்குக்கு, ஆபத்தென்றால் மான் போல மின்னல் வேகத்தில் ஓடத்தெரியாது, குரங்குகள் போல மரத்துக்கு மரம் துரிதமாகத் தாவத்தெரியாது. குரங்காகவும் இல்லாமல், மனிதனாகவும் இல்லாமல் இரண்டுக்கும் நடுவில் பரிணாம…
தமிழர்களின் ஒற்றுமை
ஒற்றைப் புள்ளி மனிதகுல வரலாற்றில் தமிழர்கள் ஒற்றுமையாக இருந்ததற்கான தடயங்கள் மிகக் குறைவு. இது தமிழர்களின் முகத்தில் ஓங்கி அறைவது போன்ற உணர்வென்றாலும், அதுதான் உண்மை. தமிழர்களை எப்போதும் பிரித்து வைக்க சாதிமதங்கள் தன் பங்கைப் பெரிதாய் ஆற்றியிருக்கின்றன. இந்த கட்டுரையில் இரண்டு வரலாற்று சம்பந்தவங்களை அலசி அதன் பின்னணியில், எது தமிழர்களை இணைத்தது என்று ஆராய விழைகிறேன். இது போன்று தமிழர்கள் ஒன்றிணைந்த பிற தரவுகளை உற்றுநோக்கினாலும், தமிழர்களை இணைத்தது ஒரேயொரு புள்ளிதான் என்பது விளங்கும்….
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப – மூன்று
மூன்றாம் இடம் நம் பூவுலகில் மூன்றாம் இடத்தைத் தவிர சிறப்பான இடமொன்று இருக்குமா என்பது சந்தேகமே. ஏனென்றால், சூரியக்குடும்பத்தில் நமது பூமியே மூன்றாவது இடத்தில்தான் இருக்கிறது. ஆகையால் மூன்றாம் இடம் என்பது பூமியின் இடத்தைக் குறிக்கும். விளையாட்டிலோ, படிப்பிலோ மூன்றாம் இடம் கிடைத்தால் பூமியை ஒரு காரணம் சொல்லி மூன்றாம் இடம் பெற்றதற்கு பெருமை தேடிக் கொள்ளலாம். தமிழில் சிறுகவிதை முதல் பெரும் காவியம் வரை, துவக்கம் உலகை முன்னிறுத்தி அமைய வேண்டுமென்பது எழுதப்படாத விதி. அது…
சம்பிரதாயங்களும் சினிமாப் பாடல்களும்
நல்ல நாட்கள், கெட்ட நாட்கள் என்று அனைத்துக்குமே நாம் சில சடங்குகள், சம்பிரதாயங்களைப் பின்பற்றுவோம். அந்த சடங்குகள் வரிசையில் காலப்போக்கில் பல புதிய பழக்கங்கள் இணைந்துகொள்வது இயல்பு. அந்த வகையில் திருமணம், கோயில் திருவிழாக்கள் போன்றவற்றில், சில குறிப்பிட்ட திரைப்படப் பாடல்கள் இடம்பெறுவதுண்டு. எனது ஊர் முள்ளக்காடு, தூத்துக்குடிக்கு அருகில் இருக்கும் கிராமம். எனது கிராமத்தில், இது போன்ற நிகழ்ச்சிகளில் தவறாமல் இடம்பெறும் சில பாடல்களை சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். இது எனது ஊரில் மட்டுமல்லாது, அந்த வட்டாரத்தில்…
தூத்துக்குடிக்காரன் காதல் கவிதை
பையப்பைய மனசுக்குள்ள நொழஞ்சி என் கையைப்பிடிச்சவளே… செரட்டயப்போல என் காதலையும் பொரட்டிப் போட்டவளே… அங்குட்டும் இங்குட்டும் அலைஞ்ச என்ன எங்குட்டும் போவாம கட்டிப்போட்டவளே.. தார்சா உள்ள மொடங்கிக் கெடந்தவன.. ராசா மாதிரி ஊர சுத்த வச்சவளே… சென்னியப் பேத்தாலும் சும்மா இருந்தவன இன்னைக்கு வெண்ணியக் குடிக்க வச்சிட்டடி.. ஏல மக்கான்னு கூப்பிட்டவன எல்லாம் ஏம்ல இப்படின்னு பண்றான்னு கேக்க வச்ச.. கெழக்கால போற கெழடுகட்ட கூட வடக்காம போவயில வாயாற திட்ட வச்ச… பாம்பக் கண்டாலும் பயிராத…
பழமொழிகளும் அதன் உண்மை அர்த்தங்களும்
1) அரசனை நம்பி புருசனைக் கைவிட்டது போல. இங்கு அரசன் என்பது அரசமரத்தைக் குறிக்கும். பொதுவாகப் பெண்கள் குழந்தைப் பேறு வேண்டி அரசமரத்தை சுற்றுவது வழக்கம். அரசமரத்தை சுற்றினால் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை. என்னதான் நம்பிக்கையுடன் அரசமரத்தை சுற்றினாலும், கணவனை சுற்றி வந்தால்தானே குழந்தை பிறக்கும். கணவனை சுற்றாமல், அரசமரத்தைச் சுற்றுவதில் ஒரு பயனில்லை என்பதை உணர்த்தச் சொல்லப்பட்டதுதான் இந்தப் பழமொழி. “அரசனை நம்பி, கட்டியக் கணவனைக் கைவிட்டுப் போனவள்” என்று ஒரு இழிவான தகவலைப்…
முப்பாட்டன் வள்ளுவனின் கருத்தியல் தொகுப்பு
அறம் என்னும் பாட்டன் வீட்டு சொத்து உலகப் பொதுமறை திருக்குறள், இரண்டு வரிகளுக்குள் அடங்கி விடும் வார்த்தைத் தொகுப்பு அல்ல. வாழ்வின் எந்த சூழ்நிலையில் இருக்கும்போது படித்தாலும், அந்த சூழ்நிலைக்கேற்ற விடையைத் தரும் அட்சய பாத்திரம். உலகப் பொதுமறை என்றாலும் அது என் பாட்டன் வீட்டு சொத்து என்ற உரிமையில் திருக்குறள் உலகத்துக்குள் நுழைய முற்படுகிறேன். திருக்குறளின் மையக்கருத்து எது என்று நாம் மேடை போட்டுச் சொல்ல வேண்டியதில்லை. மூன்றாம் வகுப்பில் முதன்முதலாகத் திருக்குறளைப் படிக்கத் துவங்கிய…
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப – இரண்டு
இரண்டாம் இடம் படிப்பு முதல் விளையாட்டு வரை இரண்டாம் இடம் என்பது சற்று கடினமான இடம்தான். ஒட்டுமொத்த உழைப்பையும் கொடுத்துப் போராடி முதல் இடத்தைத் தவறவிட்டு, இரண்டாம் இடத்தைப் பிடித்தவருக்குப் பாராட்டுக்களை விட அறிவுரைகள்தான் அதிகம் வந்து சேரும். ஏன் முதல் இடத்தைத் தவறவிட்டீர்கள் என்று எல்லோரும் கேள்விகளால் துளைத்தெடுப்பார்கள். இத்தனை நாள் உழைத்த உழைப்பே வீணாகிவிட்டது போன்ற மனநிலைக்குக் கொண்டு வந்து விடுவார்கள் இரண்டாம் இடம் பெற்றவரை. இரண்டாம் இடம் பெற்றவர் மட்டுமல்ல, படிப்போ, விளையாட்டோ,…
தாவாங்கட்டையைத் தொங்க விடும் தகவல்கள்
ஒவ்வொரு நாளும் 80 லட்சம் மின்னல்கள் பூமியைத் தாக்குகின்றன. “மாயி அண்ணன் வந்துருக்காக, மாப்பிள்ளை மொக்கச்சாமி வந்திருக்காக” என்றெல்லாம் வெற்றிலை பாக்கு வைத்து அழைக்காமலே 80 லட்சம் தடவை பூமியை தொட்டுப் பார்க்கிறது அந்த மின்னல். மின்னலையே மிரட்டிப் பார்த்த மாப்பிள்ளை மொக்கைச்சாமி ஒருவர் வாழ்ந்திருக்கிறார். அவர் பெயர் ராய் சல்லிவன் (Roy Sullivan) (கி.பி. 1912 – 1983). ஒன்றல்ல, இரண்டல்ல, அந்த மனிதரை 7 முறை மின்னல் தாக்கியிருக்கிறது. பயப்பட வேண்டாம், நம்ம சல்லிவனுக்கு ஆயுசு…
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப – ஒன்று
எண்ணும் எழுத்தும் எண்ணித் துணிக என்று வள்ளுவர் எண்ணத்தைப் பற்றிதான் சொல்லியிருக்கிறார். எண்ணத்துக்கும், எண்களுக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும் என்பது புரியவில்லை. ஆனால், கிராமத்துப் பக்கம், எத்தனைப் பொருட்கள் இருக்கின்றன என்பதை, எத்தனை எண்ணம் இருக்கிறதென்று கேட்பார்கள். நம் மனதில் உதிக்கும் எண்ணமே ஒரு கணக்குதானோ என்று தோன்றுகிறது. தமிழைப் பொதுவாக தமிழ் நெடுங்கணக்கு என்று சொல்வார்கள். அதனால்தானோ என்னவோ, மனதில் உதிக்கும் எண்ணம் என்ற வார்த்தைக்கும் கணித எண்ணுக்கும் இடையே இவ்வளவு வார்த்தை ஒற்றுமை….
பட்டாம்பூச்சியில் ஏன் பாகுபாடு
ஆண்குழந்தைகள் விதிவிலக்கல்ல நம் சமூகத்தில், பெண்களுக்கெதிரான குற்றங்களுக்கு சமூகக் குரல் ஓங்கி ஒலிக்கத் துவங்கியிருக்கிறது. அது கட்டாயத் தேவையும் கூட. உயர்ந்த பண்பாடு, கலாச்சாரம் கொண்டவர்கள் என்று பெருமை பேசிக்கொள்ளும் நாடுகளில் கூட பெண்கள் இரண்டாம் தர குடிமக்களாகத்தான் பார்க்கப்படுகிறார்கள் என்பது அருவெறுப்பான உண்மை. சினிமாக்களில் குத்துப்பாடல்களில் அரைகுறையாக ஆட விடுவதில் துவங்கி, விளையாட்டு மைதானங்களில் உற்சாகமூட்டும் பெண்கள் என்று கீழ்த்தரமான ஆடைகளுடன் ஆட விடுவது வரை பெண்களை ஒரு போதைப் பொருள்போல பயன்படுத்தும் அவலம் இன்றும்…
யார்/எது கடவுள்?
கடவுள் இல்லை யார் கடவுள்? என்ற கட்டுரையின் முதல் தலைப்பை கடவுள் இல்லை என்று தொடங்குவது சிறப்பாக இருக்குமென்று நினைக்கிறேன். இது ஒட்டுமொத்தமாக கடவுள் மறுப்பு என்ற நிலையில் இருந்து உதிர்ந்த சொல்லன்று. நான் இந்த உலகில் உள்ள மதங்கள் அனைத்தும் சுட்டிக்காட்டும் கடவுளை கடவுள் என்று ஏற்றுக்கொள்ளவில்லை. அப்படி ஒருவர் இருப்பதாகவும் நம்பவில்லை. அதனால்தான் இந்த ஏடாகூடமான தலைப்பு. அப்படியானால் யார் கடவுள்? மீண்டும் அந்த விடையறியா சரித்திரக் கேள்வி நம் மீது கணையாகப் பாய்கிறது. பொதுவாக…
இந்து மதமும் தமிழர் சமயமும்
இந்து என்னும் காந்தம் இந்து என்ற வார்த்தை, நாம் நினைப்பது போல் ராமாயணம், மகாபாரதம், ரிக் வேதம் போன்ற நூல்களில் கண்டெடுக்கப்பட்ட வார்த்தையல்ல. இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட வார்த்தையுமல்ல. இவ்வளவு ஏன், 200 ஆண்டுகளுக்கு முன் அது ஒரு மதத்தைக் குறிக்கும் சொல் கூட இல்லையென்பது பெரும்பாலான இந்தியர்களுக்கே அதிச்சியான தகவல்தான். இன்று, இந்து மதம்தான் இந்தியாவில் பெரும்பான்மையான மதம்; இந்தியா என்ற பெயரே இந்து என்ற பெயர் போலதான் தோன்றுகிறது. ஆனால் இந்து என்ற வார்த்தை நம்…
