உப்பளங்களை அழித்து கப்பல் கட்டும் தளமா?

தூத்துக்குடியில் கப்பல் தளம் அமைக்கும் முயற்சியில் மத்திய அரசும் மாநில அரசும் இறங்கியிருக்கிறது. கப்பல் கட்டும் தளம் அமைப்பதில் அதுவும் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்காக, தமிழ்நாடு அரசாங்கம் சில நிலங்களை கையகப்படுத்த விழைகிறது. அரசாங்கம் கையகப்படுத்த எண்ணும் நிலங்களுக்குள் முள்ளக்காடு, புல்லாவெளி, பழையகாயல் பகுதிகளில் உப்பளங்கள் இருக்கிறது. உப்பளங்கள் அந்தப் பகுதி மக்களின் அடிப்படை வாழ்வாதாரம். உப்பளத்தொழில் மட்டுமல்ல, அந்தப் பகுதியில் மீன்பிடித்தொழிலும் பாதிப்புக்குள்ளாகும். ஆகையால் உப்பளங்களுக்கும் மீன்பிடித்தொழிலுக்கும் பாதிப்பு வராத…

தமிழன் ஏன் அடிமையானான்?

அடிமைப்பட்டுக் கிடப்பதை விட கேவலமானது நாம் அடிமையாய் இருக்கிறோமென்று உணராமல் இருப்பது. இந்த வாக்கியம் பெரும்பாலான தமிழர்களுக்கு கனக்கச்சிதமாய்ப் பொருந்தும். நமது மாநிலத்தை எவன் ஆண்டாளும் கவலையில்லை, ஆனால் பூர்வக்குடி தமிழர்கள் மட்டும் ஆட்சி செய்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில் வாக்களிப்பவர்கள்தான் அதிகம். அதனால்தான் தமிழ்நாட்டைக் காலங்காலமாய் பிற மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆட்சி செய்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டுமானால், அடிமை மனநிலையில் இருந்து தமிழர்கள் மீண்டு வரவேண்டும். அப்படி மீண்டு வந்தால்தான் தமிழர்கள் இந்த மண்ணில்…

சல்லியர்கள் – எதிரிகளால் கூட குறைசொல்ல முடியாத படம்

மேதகு படத்தைப்போல இன்னொரு வரலாற்று சிறப்புமிக்க திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் கிட்டு. சல்லியர்கள், ஈழத்தமிழர் வரலாற்றின் ஒரு மைல் கல். தமிழர் வரலாற்றைச் சொல்லும் படத்தைத் தமிழ்நாட்டில் வெளியிட முடியவில்லை என்பது தமிழர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டிய செய்தி. இத்தனை இன்னல்களுக்கு நடுவிலும் இந்தப் படத்தைத் தமிழர்களிடம் கொண்டுபோய் சேர்த்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்களுக்கும் இயக்குனர் கிட்டு அவர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள். சல்லியர்கள் திரைப்படத்தைத் திரையிட மறுத்த PVR திரையரங்குகளைத் தமிழர்கள் புறக்கணிப்போம். சல்லியர்கள் திரைப்படத்தை…

கழுகுமலை வெட்டுவான் கோவிலும்! ஓர் அதிசயப் பறவையும்!

குடைவரைக்கோவில் என்பது தமிழர்களின் கலை. முதலில் குடைவரைக்கோவில்கள் உருவாக்கப்பட்டது தமிழ்நாட்டில்தான். மாமல்லபுரத்தில் இருக்கும் குடைவரைக்கோவில்களே இதற்கு சான்று. மாமல்லபுரத்து குடைவரைக்கோவில்களை முன்மாதிரியாகக் கொண்டுதான் எல்லோரா குடைவரைக்கோவில்கள் கட்டப்பட்டது. ஆனால் எல்லோரா குடைவரைக்கோவில்கள் மலையை மேலிருந்தே குடைந்து கட்டப்பட்டது. எல்லோரா குடைவரைக்கோவில்கள் பிரம்மாண்டத்தின் உச்சமென்று சொல்லலாம். தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் இருக்கும் வெட்டுவான் கோவிலும் எல்லோரா குடைவரைக்கோவில் போலவே மேலிருந்து மலையைக் குடைந்து கட்டப்பட்ட கோவில். தமிழ்நாட்டில் இப்படிக் கட்டப்பட்ட ஒரே கோவில் கழுகுமலை வெட்டுவான் கோவில்தான். இது…

தமிழ்க்கடவுள் முருகன் பற்றி திடுக்கிடும் தகவல்கள்!

தமிழ்க்கடவுள் முருகன் மீது நடந்த பண்பாட்டுத் திணிப்புகள் எண்ணிலடங்காதவை. முருகனின் பெயர், வாகனம், தாய் தந்தை, மனைவி உள்ளிட்ட அனைத்துத் தரவுகளிலும் ஆரியக் கதைகள் முருகனது வரலாற்றையே மாற்றியிருக்கிறது என்பதே உண்மை. முருகன் பற்றிய சான்றுகளை சங்க இலக்கியங்கள் மூலமாகக் கொடுத்திருக்கிறேன். காணொளியைப் பார்த்துத் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்.

பழமொழிகளில் புதைந்த தமிழ் வரலாறு! | Tamil Proverbs with the history of Tamilnadu!

பழமொழிகள் ஒன்றிரண்டு வரிகள்தான் என்றாலும், அது தாங்கி நிற்கும் வரலாற்றின் ஆழம் அதிகம். ‘கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே’ என்ற ஒற்றை வரியின் மூலம் குறிஞ்சி நிலத்தின் நாகரிகம் வரைக்கும் நம்மால் பயணப்பட முடிகிறது. தமிழர்களின் பண்பாட்டையும், கலாச்சாரக் கூறுகளையும் உள்ளடக்கிய சில பழமொழிகளைக் காணலாம். காணொளியைப் பார்த்துத் தங்களின் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

தாய்லாந்தில் நீங்கள் செய்ய வேண்டிய முதல் வேலை!

தமிழ்நாட்டில் நடந்த பிரிட்டிஷ் ஆட்சி பிடிக்காமல், தாய்லாந்து நாட்டுக்குச் சென்ற ஒரு குழுவினரை வைத்திப் படையாட்சி என்ற தமிழர் வழிநடத்திச் சென்றிருந்தார். வழிநடத்திச் சென்றதோடு மட்டுமல்ல, தாய்லாந்து நாட்டில் மாரியம்மனுக்கு ஒரு கோவிலும் கட்டியிருக்கிறார். தாய்லாந்து அரசாங்கமே வைதிப்படையாட்சி அவர்களுடையப் பெயரை கோவிலுக்கு அருகிலிருக்கும் தெருவுக்கு வைத்துப் பெருமைப் படுத்தியிருக்கிறது. வைத்திப் படையாச்சியின் வாழ்க்கை வரலாறு ஆராய்ந்து தமிழ் மக்களிடையே கொண்டு வரப்பட வேண்டும் என்பது இந்தக் காணொளியின் முதன்மையான நோக்கம். தாய்லாந்து நாட்டுக்கு செல்லும் தமிழர்கள்…

அர்த்தநாரீஸ்வரர்: கடவுளா? கண்ணகியா? | Ardhanarishvara: God or Kannagi?

கண்ணகி வழிபாடு தமிழ்நாட்டில் பல வடிவங்களில் இருக்கிறது. கண்ணகியின் சாபத்திற்குப் பின் தமிழ்நாட்டில் பஞ்சம் நிலவியதால், மழைக்காக கண்ணகியிடம் வேண்டினார்கள். அதுதான் மாரியம்மன் வழிபாடு. செல்லத்தம்மன், பகவதியம்மன் என்ற பெயர்களில் கண்ணகி வழிபாடு உண்டு. ஆனால் அர்த்தநாரீஸ்வரர் என்பது கண்ணகியின் வழிபாடாக இருக்கலாம் என்ற யூகங்கள் நிலவுகிறது. அது தொடர்பான ஆய்வுகள் நடக்கின்றன. சேரன் செங்குட்டுவன் இமயமலையிலிருந்து கல்லெடுத்து வந்து கண்ணகிக்கு சிலை எடுத்தது தெரியும். கண்ணகி ஒரு மார்பை இழந்தவர் என்பதால் சிலை செய்யும்போது மார்பு…

திராவிடம் – நறுக்குவோம் பகையின் வேர்

திராவிடம் என்பது தமிழ்நாட்டைத் தமிழரல்லாதவர்கள் ஆளவும் கொள்ளையடிக்கவும் உருவாக்கப்பட்ட ஒரு சதிகாரக் கூட்டமைப்பு. பல தமிழ்த்தேசிய சிந்தனை கொண்ட தலைவர்களும் திராவிடத்தோடு உறவாடியிருக்கிறார்கள். ஆனால், கடைசியில் தமிழ்த்தேசியத்தை அழிக்கும் கருவி என்பதை உணர்ந்து கொண்டனர். திராவிடம் பற்றி சில தலைவர்கள் சொன்ன கருத்துக்களைக் காண்போம். அயோத்திதாசப் பண்டிதர், மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர், முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விஸ்வநாதம், பாவலரேறு பெருஞ்சித்திரனார், தந்தை சி.பா. ஆதித்தனார், ஒரிசா பாலசுப்ரமணியம், அண்ணல் அம்பேத்கர் ஆகியோர் திராவிடம் பற்றி சொன்ன கருத்துக்கள் சுருக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளன….

இந்தியாவை ஆட்சிசெய்த கற்பனை கதாநாயகன்! | The fictional hero who ruled India!

அறிவில் சிறந்தவர்கள் என்றும் ஆளுமைத்திறனுடன் இருப்பார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால், வெறும் புராணக்கதைகள் மூலமாகவும், பொய்யான வரலாற்றுக் கதாபாத்திரங்கள் மூலமாகவும் நாங்கள் அறிவாளிகள் என்று சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால், ஒட்டுமொத்த இந்தியாவே அப்படிப்பட்ட கற்பனைக் கதாபாத்திரங்கள் மூலமாகவும், புராணக்கதைகள் மூலமாகவும் அடிமையாக்கப்பட்டது என்று சொன்னால் உங்களுக்கு வியப்பாக இருக்கும். அப்படி உருவாக்கப்பட்ட ஒரு கற்பனை கதாபாத்திரம்தான் சாணக்கியன். சாணக்கியன்தான் சந்திரகுப்த மௌரியரை ஆளாக்கி மௌரிய அரசை உருவாக்கினான் என்று சொல்கிறார்கள். இந்தியாவிலே…

இந்த வரலாறு தெரியாமல் ‘தமிழ்நாடு’ என்று சொல்லாதீர்கள்!

தமிழர்கள் சேர நாடு, சோழநாடு, பாண்டியநாடு, ஈழ நாடு என்று பல நாடுகளாகப் பிரிந்து வாழ்ந்தாலும், ஒட்டுமொத்தமாகத் தமிழர்கள் வாழும் பகுதி தமிழ்நாடு என்னும் புரிதல் தமிழர்களிடையே பல்லாயிரம் ஆண்டுகளாகவே இருந்திருக்கிறது. பெருந்தலைவர் காமராஜர் ஆட்சி காலத்திலேயே மெட்ராஸ் மாகாணம் என்ற பெயர் தமிழ்நாடு என்று பெயர் மாற்றப்பட்டது என்பதுதான் வரலாறு நமக்கு சொல்லும் செய்தி. பெருந்தலைவர் ஆட்சிகாலத்துக்கு முன்பே, பாரதியாரும் பாவேந்தர் பாரதிதாசனும் தமிழ்நாடு என்று பாடி விட்டார்கள். அவர்கள் இருவருக்கும் முன்பு, பெரியபுராணம், கம்பராமாயணம்,…

திராவிடம் – ஆரிய மடத்தின் A Team | Dravidam – A Team of Ariyan

திராவிடம் என்னும் சங்கேதச்சொல் அழித்துவிட்டுச் சென்ற தமிழின் வரலாற்றுத் தடயங்கள் பல்லாயிரம். திராவிடம், தமிழ் என்ற முகமூடியை அணிந்துகொண்டு ஆரியத்துடன் கள்ளக்கூட்டணியில் ஈடுபடுவது என்றும் புதிதல்ல. ஆரியத்தை எதிர்க்கிறோம் என்ற பொய் பிம்பத்தை நம்பி ஏமாந்து போகும் தமிழர்கள் இன்றும் இருக்கிறார்கள் என்பதுதான் தமிழுக்கு வந்த சோதனை. நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்டிருப்பது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்தும் திராவிடம் முன் வைக்கும் சான்றுகளின் உண்மைத்தன்மையை அலசுகிறது இந்தக் காணொளி. காணொளியைப் பார்த்துவிட்டுத் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்யுமாறு…

நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டிருக்கும் பழமொழிகள் | Wrongly understood Tamil Proverbs

பல்லாயிரம் காலத்து அனுபவங்களின் தொகுப்புதான் பழமொழிகள் என்று சொன்னால் மிகையாகாது. தமிழில் காலங்காலமாக வழக்கில் இருக்கும் சில பழமொழிகளைக் காண்போம். சில பழமொழிகளுக்கு பல அர்த்தங்கள் உண்டு. மேலும் சில பழமொழிகளை நாம் தவறாகப் புரிந்து வைத்திருக்கிறோம். அவற்றின் சரியான பொருள் என்ன என்பதையும் காண்போம்.

18 கோடிக்கு சரஸ்வதி மஹால் நூலகத்தில் திருடப்பட்ட பைபிள் | Ancient Bible Stolen for 18 Crores

தமிழ் மொழியின் அளப்பரிய பெருமைகளில் ஒன்று, ஆசியாவில் அச்சிடப்பட்ட முதல் பைபிள். அச்சிடப்பட்ட 3 பைபிளில் இரண்டை ஏற்கனவே டென்மார்க்கும் இங்கிலாந்தும் எடுத்துக்கொண்டது. மூன்றாவது பைபிள் 2005ம் ஆண்டு வரை சரஸ்வதி மஹால் நூலகத்தில் பாதுகாப்பாகத்தான் இருந்தது. ஆனால் அதனையும் 18 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்து இரண்டு ஜெர்மானியர்கள் திருடிக்கொண்டு போய்விட்டனர். தமிழ்நாடு அரசாங்கம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழ்நாட்டின் பெருமைமிகு ஆவணங்களின் மீது தமிழ்நாட்டு அரசாங்கத்தின் அக்கறை அவ்வளவுதான். அந்த பைபிள் மட்டுமல்ல,…

ஈழம் – தண்ணீருக்கு நடுவில் ஒரு கண்ணீர்த்துளி | Eelam – A teardrop in the middle of ocean

21ம் நூற்றாண்டில் நமது கண்முன்னே நம் உறவுகள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள். உலகத்தில் 10 கோடி தமிழர்கள் இருக்கிறோமென்று மார்தட்டிக் கொண்டாலும், நமது தொப்புள்கொடி உறவுகள் சிதைக்கப்பட்டபோது நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இதற்கு முதன்மையான காரணம், தமிழர்களுக்கு ஈழத்தின் பூர்வகுடிகள் யார் என்ற புரிதல் இல்லை என்பதுதான். ஈழத்தின் பூர்வகுடிகள் யார் என்பதை விளக்குகிறது இந்தக் காணொளி. காணொளியைப் பார்த்து, தங்கள் கருத்துக்களைப் பதிவிடுங்கள். In the 21st century, our Tamil peoples were massacred…

தமிழர்கள் இந்தியாவை இழந்த கதை! | How Tamil People Lost India!

தமிழ்நாட்டைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும், பிற மாநிலத்தவர் அந்த மண்ணை ஆட்சிசெய்ய முடியாது. ஆனால் தமிழ்நாட்டில், தமிழர்கள் ஆட்சி செய்வது மிக மிக அரிது. இந்த நிலை மாறினால்தான் தமிழர் வாழ்வில் முன்னேற்றம் வரும். இனி வரும் காலங்களில் தமிழரல்லாத ஒருவர் தமிழ்நாட்டை ஆள முடியாது என்ற நிலை வரும். அதற்கான முதல் படிதான் இந்தக் காணொளி. அனைவரும் காணொளியைப் பார்த்துத் தங்களின் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.

ராமருக்கு All The Best சொன்ன ஆதாம்! | आदम ने कहा भगवान राम को शुभकामनाएँ !

தமிழ்நாட்டுக்கும் ஈழத்துக்கும் இடையிலான பாலம் போன்ற நிலப்பரப்புக்குப் பின்னால் நாடளாவிய அரசியலும் உண்டு உலகளாவிய மதச்சாயமும் உண்டு. தமிழ்நாட்டுக்கும் ஈழத்துக்கு இடையே இருப்பது மண்ணாலான இணைப்பு என்கிறது அறிவியல். நாசாவே சொல்லிவிட்டது அது ராமர் கட்டிய பாலம் என்கிறது இந்து மதம். இல்லை அது ஆதாம் பாலம் என்கிறது கிறிஸ்தவ மதம். இல்லை இல்லை அது சேதுபதி மன்னர்கள் ஆண்டதால் அதனை சேதுப்பாலம் என்கிறார்கள் ஒரு சாரார். அந்த நிலப்பரப்புக்குப் பின்னால் இருக்கும் வரலாற்று உண்மை என்ன?…

நீங்களும் எழுத்தாளர் ஆகலாம் | How to become a writer

எழுதுவது ஒரு கலை. ஒரு கதை எழுத வேண்டும், வரலாறு தொடர்பான புதினம் (நாவல்) எழுத வேண்டுமென்று பலருக்கும் ஆசை இருக்கும். ஆனால், எல்லோராலும் எழுத்தாளர் ஆகிவிட முடியாது என்ற எண்ணம் பலரிடம் இருக்கிறது. அது உண்மையல்ல. திட்டமிட்டு எழுதினால் அனைவராலும் எழுத முடியும். எழுதுவதை எவ்வாறு திட்டமிட வேண்டுமென்பதை விளக்குகிறது இந்தக் காணொளி. காணொளியைப் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களைப் பதிவிடுங்கள். Writing is an art. Many people have a desire to write…

தேசம் தேசியம் தமிழ்ச்சொல்தானா |Is Desam a Hindi word

தேசம், தேசியம் என்ற இரண்டு சொற்களை சுற்றித்தான் தமிழக அரசியல் நகர்கிறது. இவை தமிழ்ச்சொற்களா அல்லது வடமொழியிலிருந்து கடன் வாங்கப்பட்ட சொற்களா? அலசுகிறது இந்தக் காணொளி. Tamil Nadu politics revolves around two words: nation and nationality. Are these Tamil words or words borrowed from the vernacular? This video analyzes.

காமராஜர் AC இல்லாமல் தூங்க மாட்டாரா? | Trichy Siva controversial speech about Kamarajar

எளிமையின் அடையாளம் காமராஜர். ஒரு அரசியல்வாதி இப்படித்தான் இருக்க வேண்டுமென்று வாழ்ந்து காட்டியவர் பெருந்தலைவர் காமராஜர். வாழ்நாள் முழுவதும் ஒரு வாடகை வீட்டில்தான் வாழ்ந்தார். திருச்சி சிவா என்னும் வரலாற்றைப் படிக்காத ஒருவர், காமராஜர் AC இல்லாமல் தூங்க மாட்டார். காமராஜர் சென்ற இடமெல்லாம் கருணாநிதி AC வைத்துக் கொடுத்தார் என்றெல்லாம் பச்சைப்பொய்களை சொல்கிறார். இந்த மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் வாழ்ந்து மறைந்த பெருந்தலைவர் மீது சொன்ன அவதூறுகளுக்கான பதிலடிதான் இந்தக் காணொளி. Kamarajar is the epitome…